ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!

0
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் அறிவிப்பு!
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் அறிவிப்பு!
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த மன்னன் ராஜேந்திர சோழன் அவரது பிறந்த தினம் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு விழா

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு எனும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றை சில பெருமை வாய்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கங்கைகொண்ட சோழபுரத்தை சார்ந்த சில பகுதிகளை மன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்து வந்தார். அதன்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் கட்டின அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் தற்போது உலகப் புகழ் வாய்ந்த புனித தலமாக, சிறந்த சுற்றுலா தலமாகவும் இன்றளவும் கருதப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 12ல் விண்ணில் பாயும் ஜிசாட்-1 செயற்கைக்கோள் – கவுண்ட் டவுன் தொடக்கம்!

இது தவிர முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கலை மற்றும் கட்டிடக்கலை பெருமை மிக்க வரலாறாக திகழ்கிறது. இந்த கட்டிடக் கலையை உலக ஐக்கிய நாடுகள் நிறுவனமான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆனி மாதம் திருவாதிரை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வாழ்க்கை கொடுக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!

அந்நாளில் மாவட்ட அளவிலான சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதனிடையே இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரத்தின் மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என உத்தரவிட்டுள்ளார். எனினும் இந்த திருவிழா அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!