கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வாழ்க்கை கொடுக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் குடும்பத்தினரால் துரத்தப்பட்ட கண்ணனுக்கு, மீனாவின் தந்தை ஜனார்த்தனன் வாழ்க்கை கொடுப்பதாக, புதிய கதைக்களம் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய அப்டேட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தற்போது ஒருவரும் எதிர்பாராத விதமான கதைக்களத்துடன் பயணித்து வருகிறது. வழக்கமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த அண்ணனான மூர்த்தி கதாபாத்திரம் பொறுமையானவராக, குடும்பத்தின் சந்தோஷத்துக்காக வாழும் ஒரு நபராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல தான் மூர்த்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின் கடைசி தம்பி கண்ணன் செய்யும் சில சிறிய தவறுகளை மன்னித்து பொறுத்துக்கொண்டு குடும்பத்தை வழிநடத்தி வந்தார்.
ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
தற்போது இந்த சீரியலில் குடும்பத்தினருக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்த கண்ணனை மூர்த்தி குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இருந்தாலும், கண்ணனை நினைத்து முழு குடும்பமும் கவலையில் வாடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணன், ஐஸ்வர்யா ஜோடிக்கு அவரது நண்பர் இப்போதைக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். எனினும் வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் இத்தொடரில், ஆதரவற்ற கண்ணனுக்கு மீனாவின் அப்பா ஜனார்த்தனன் வாழ்க்கை கொடுக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
MBA, MCA படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணனின் காதல் திருமணத்தை ஓரளவு ஏற்றுக்கொண்டவர் மீனா தான். அதே போல மீனாவின் அப்பா ஜனார்த்தனனுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது மூர்த்தி குடும்பம் அவருக்கு ஆதரவாக நின்றது. அதனால் இப்போதைக்கு கண்ணனுக்கு உதவ ஜனார்த்தனனால் மட்டுமே முடியும். எனவே வரும் நாட்களில் கண்ணனை ஏற்றுக்கொண்டு, இருக்க இடம் தந்து, வேலையும் தரும் ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் அவரை மீண்டும் இணைத்து வைப்பார் என கூறப்படுகிறது.