ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் உச்ச நீதிமன்றம் செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை – ஜிஎஸ்டி வரி உயர்வு!
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. வரும் 22 ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். வரும் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா கால வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு விவேகானந்தன், வேலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மதுமதி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சம்பத், விழுப்புரம் மாவட்டத்திற்கு பழனிசாமி, நெல்லை மாவட்டத்திற்கு ஜெயகாந்தன், தென்காசி மாவட்டத்திற்கு பொ.சங்கர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு காமராஜ் ஆகியோர் நியமிக்கப்ட்டுள்ளனர்.