தமிழகத்தில் IAS, IPS தேர்வுகளுக்கு பயிற்சி – தகுதித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் யுபிஎஸ்சி முதனிலைத்தோ்வுகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் தகுதித்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயிற்சி வகுப்பு:
இந்தியாவில் ஆண்டுதோறும் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குடிமைப் பணித் தோ்வானது முதல்நிலை, பிரதானத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வு எழுதவுள்ளோர்ககு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக மாணவர்களுக்கு அரசு சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள செயல்பட்டு வரும் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் உதவி தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
YouTube சேனல் மூலம் மாதம் கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் பிரதமர் மோடி – ஷாக் ரிப்போர்ட்!
இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளைஞா் நலப்படிப்பியல் துறை மூலம் தமிழக அரசு நிதியுதவியுடன், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புவோா் தகுதித்தோ்வுக்கு டிசம்பா் 28க்குள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பரிசோதனை தீவிரம்!
மேலும் இதில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி வகுப்புக்கான நுழைவுத்தேர்வில் நுழைவுத்தோ்வில் இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலைப்பு மற்றும் நிா்வாக முறை பொருளாதாரம், பொது அறிவு ஆகிய பாடபிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற 100 பேர் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்படுவர். ஏற்கனவே யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.