இந்திய விமான படையில் 300+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய விமானப்படை (IAF) விமானப்படை பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) 317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IAF வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்திய விமானப்படையில் விமானப்படை பொது நுழைவுத் தேர்வுக்காக Flying Brach மற்றும் Ground Duty பணியிடங்களுக்கு மொத்தமாக 317 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Flying Brach பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 01.01.2023 தேதியின்படி 20 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கமர்ஷியல் பைலட் உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 26 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Ground Duty விண்ணப்பிக்க 01.01.2023 தேதியின்படி 20 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10+2 அளவில் கணிதம் மற்றும் இயற்பியலில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் அல்லது அது தொடர்புடைய துறைகளில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 250/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். NCC சிறப்பு நுழைவுத் தேர்வர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்பபடிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. 30.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.