IPL 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் குறிவைக்கும் 18 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பிப்ரவரி 12 ஆம் தேதி IPL மெகா ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்று சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகின்றனர் . இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் விலகி உள்ளனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் 18 வீரர்களை குறிவைத்துள்ளது.
IPL மெகா ஏலம்:
ஐபிஎல் 2022 ஏலம் இம்மாதம் 12 ,13 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இரண்டு புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்த்து, ஐபிஎல் 2022 யில் மொத்தம் 10 அணிகள் போட்டியிட்டுள்ளனர். இந்த ஆண்டு புதிதாக விளையாடும் அணிகளுக்கு யார் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்டியாவையும் , லக்னோ அணிக்கு ராகுலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
IND vs WI T20 தொடர் – ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி! BCCI அறிவிப்பு!
இந்த ஆண்டு பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. இதை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் 18 வீரர்களை குறிவைத்துள்ளது. இதற்கு முன் BCCI அறிவிப்பின் படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை 14 கோடி ரூபாய்க்கும், அப்துல் சமத்தை 4 கோடி ரூபாய்க்கும், உம்ரான் மாலிக்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டபின் இன்னும் 68 கோடி மீதம் உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு வரவேற்பு! மாணவர்கள் உற்சாகம்!
இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி தொடக்கவீரர்களாகிய ராய் ,படிக்கல் மற்றும் சஹா ஆகியோரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தினால் ஸ்மித் ,ரெய்னா மற்றும் டேவிட் மலான் ஆகியோரை குறிவைத்துள்ளது. இதனை தொடர்ந்து பந்து வீச்சாளர்களாகிய ஷமி ,பேட் கம்மின்ஸ் ,ஆவேஷ் கான் ,போல்ட்,நபி ,சாஹல் , சுந்தர் , ரபாடா,ரஷித் மற்றும் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்குர் என மொத்தம் 18 வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.