ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? – வீட்டிலிருந்தே இதை மட்டும் செய்யுங்க!
வீட்டில் இருந்தபடியே ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை எவ்வாறு இணைப்பது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு:
இந்திய குடிமகனின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. அதாவது, வங்கி கணக்கு திறப்பது, கடன் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியம். மேலும், பொதுமக்கள் எந்தவித சூழ்ச்சி வேலைகளிலும் சிக்கிவிட கூடாது என்பதற்காக ஆதார் எண்ணை பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகிய முக்கிய ஆவணங்களுடன் இணைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல், ஆதார் கார்டு விவரங்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மொபைல் எண்ணை மாற்றினாலும் கட்டாயமாக அந்த மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளை (அக்.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
வழிமுறைகள்:
- புதிய மொபைல் எண்ணை இணைக்க அல்லது மொபைல் எண்ணை மாற்ற இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று வீட்டு வாசல் வங்கி சேவை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- பின்னர், ஆதாருடன் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை தேர்வு செய்த பிறகு உங்களுக்கு அருகில் இருக்கும் வங்கி கிளையிலிருந்து கால் வரும்.
- அதன் பின்னர் தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து விவரங்களை சரிபார்ப்பார்.
- இதனை அடுத்து, உங்களது மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும்.
Join Our WhatsApp Channel ” for Latest Updates