தவறவிட்ட ரயில் டிக்கெட்டிற்கான முழு பணத்தை பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்!
தவறவிட்ட ரயில் டிக்கெட்டிற்கான முழு தொகை அல்லது ரயில் நிர்வாகமே டிக்கெட்டை ரத்து செய்தால் எவ்வாறு அந்த தொகையை பெறுவது என்பது குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்
விரைவான பயணம் மற்றும் கட்டண குறைவு போன்ற காரணங்களினால் பெரும்பாலான பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ரயிலை தவறவிட்டாலோ அல்லது டிக்கெட்டை ரத்து செய்ய நேர்ந்தாலோ முழு பணத்தை பெற்றுக் கொள்ள இயலும். தற்போது, எப்படி ரயிலில் பயணம் செய்ய இயலாத பட்சத்தில் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவது என்பதனை பார்க்கலாம். முதலில் ஐஆர்சிடிசி இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் டிக்கெட் டெபாசிட் ரசீதை தாக்கல் செய்ய வேண்டும். இதன் பின்னர் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அவரவர் வங்கி கணக்குகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் திருப்பி வழங்கப்படுகிறது.
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- Onlineல் Apply பண்ணுங்க!
இதே போல டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் பெற்றிருந்தாலும் அதனை ஆன்லைன் மூலமாக டிடிஆர் தாக்கல் செய்யப்பட்டால் அவரவர் வங்கி கணக்கில் அந்த டிக்கெட்டிற்கான பண நேரடியாக வழங்கப்படுகிறது. ஆனால், தட்கல் முறையில் பயனர் ஒருவர் டிக்கெட் பெற்று இருந்தால் அந்த டிக்கெட் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அதற்கான பணம் திரும்ப வழங்கப்படாது. தற்போது, எப்படி டிடிஆர் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்வது என்பதனை பார்க்கலாம். முதலில்,ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று மெனு என்பதை கிளிக் செய்து சர்வீஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர், ஹிஸ்டரி ஆப்ஷனில் இருக்கும் transitions என்பதை கிளிக் செய்து இணையதளம் டிடிஆரை பதிவு செய்து கடவுச்சொல் சரிபார்க்க வேண்டும். இதன் பின்னர், பயனர் டிடிஆர் தாக்கல் செய்துவிடலாம்.
Follow our Instagram for more Latest Updates
மேலும், ரயில் நிர்வாகமே சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டால் கேப்ட்சாவுடன் பிஎன்ஆர் எண் மற்றும் ரயில் எண்ணை பதிவு செய்த பின்னர் பயனருக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்த பிறகு டிக்கெட் ரத்து என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர், பிஎன்ஆர் மற்றும் பணத்தைத் திரும்ப வழங்குவதற்கான விவரங்கள் அனைத்தும் உங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்படும்.