தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை – வெயிலுக்கு டாட்டா!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்திலேயே சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதி ஆன இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய உள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறவிட்ட ரயில் டிக்கெட்டிற்கான முழு பணத்தை பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்!
மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலின் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளில் மீனவர்கள் ஜூன் 10 முதல் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், இதே போல் அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.