தமிழக அரசின் ரூ.1,000 பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா.. இல்லையா? தெரிஞ்சுக்க இதை பண்ணுங்க!

0
தமிழக அரசின் ரூ.1,000 பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா.. இல்லையா? தெரிஞ்சுக்க இதை பண்ணுங்க!
தமிழக அரசின் ரூ.1,000 பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா.. இல்லையா? தெரிஞ்சுக்க இதை பண்ணுங்க!
தமிழக அரசின் ரூ.1,000 பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா.. இல்லையா? தெரிஞ்சுக்க இதை பண்ணுங்க!

தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உங்களுக்கும் இந்த பலன் கிடைக்குமா என்பதை சோதிக்கும் முறை இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழக அரசு அனைத்து பொதுமக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், ஜனவரி 2ம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ரூ.1,000 அளிக்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

வழக்கமாக நேரடியாக மக்கள் கைகளில் அளிக்கப்படும் தொகையானது, இம்முறை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக நடத்திய ஆய்வுகளில் தமிழகத்தில் 14,84,582 பேர் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்காமல் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களில் வங்கி கணக்கு உள்ளவர்கள் ஆதாருடன் இணைக்கவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உங்கள் ஆதாருடன் எந்த வங்கியின் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதையும், வேறு வங்கி கணக்கு எண்ணை எவ்வாறு இணைக்க வேண்டும் என்றும், உங்கள் ரேஷன் கார்டு இதற்கு தகுதியானது தானா என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை? – இன்றைய வானிலை தகவல்!

Exams Daily Mobile App Download
வழிமுறைகள்:
  • முதலில், https://bit.ly/AadhaarSeedingStatus என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், ஆதார் மற்றும் பேங்க் விவரம் இணைக்கப்பட்டுள்ளதை சரி பார்க்கும் பக்கம் திறக்கும்.
  • அதில், உங்கள் ஆதார் எண் மற்றும் captcha-வை பதிவிட்டு, வரும் OTP ஐ உள்ளிட வேண்டும்.
  • உங்கள் ஆதாரில் எந்த வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டுள்ளது என்பது திரையில் காண்பிக்கப்படும். இந்த வங்கி கணக்கில் தான் உங்கள் பொங்கல் பரிசு ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும்.
  • அந்த திரையில் எந்த விவரமும் காட்டப்படவில்லை என்றால், நமது கணக்கு உள்ள வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த கணக்கில் அரசு பணம் செலுத்தும்.
  • மேலும், வேறு வங்கியின் கணக்கு எண்ணை ஆதாரில் பதிவு செய்தால், அந்த கணக்கிற்கு பணம் செலுத்தப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!