ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
ரேஷன் கார்டு என்பது மத்திய அரசு வழங்கும் முக்கியமான ஆவணம். இது ஏழைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் முக்கியமான ஆவணம். மேலும் அடையாளச் சான்றாகவும் செயல்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
முழு விவரம்:
ரேஷன் கார்டு அரசு தரவுத்தளத்துடன் தொடர்புடையது. இது மாநில அரசால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது தேவைப்படும் போது, தான் இதன் முக்கியத்துவத்தை சிலர் அறிந்து கொள்கின்றனர். அதுவரை, இதை பெறுவது எப்படி என்று கூட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் ரேஷன் கார்டை எப்படி விண்ணப்பிப்பது என்று குழப்பம் அடைகின்றனர். எந்த அலுவலகத்திற்கு சென்று யாரை பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் மத்தியில் கேள்விகள் எழும்.
Exams Daily Mobile App Download
இந்த குழப்பத்தை போக்க தான், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ்,வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
- நீங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
- நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும்.
- பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்
- பின்னர் நீங்கள் ‘உறுதிபடுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:
- உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், அதைத் தொடர்ந்து நீங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து ரேஷன் கார்டு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது உணவுத் துறையின் அருகிலுள்ள உள்ளூர் மையத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பப் படிவத்தை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – வேலை நாட்கள் அறிவிப்பு!
- விண்ணப்ப படிவத்தில் உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்களை உள்ளிடவும்.
- அதன் பிறகு, நீங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிராந்திய உணவுத் துறையின் ஊழியர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். உங்கள் சரிபார்ப்பு ஒரு வாரத்திற்குள் நடக்கும். அதன் பிறகு ரேஷன் கார்டு கிடைக்கும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்