மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 6% அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
தற்போது 7வது சம்பள கமிஷனின் படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு
தற்போது 34% என்ற அடிப்படையில் அகவிலைப்படி தொகையை பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் கூடிய விரைவில் அடுத்த அகவிலைப்படியை பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, மே மாதம் வெளியிடப்பட்ட AICPI குறியீட்டு உயர்வு மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்கான பாதை தெளிவாகியுள்ளது. அந்த வகையில் இந்த முறை ஒட்டு மொத்த அகவிலைப்படி தொகை 6 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது . இப்போது ஜூலை தவணைக்கான டிஏ 6 சதவீதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 40 சதவீதமாக இருக்கும். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.6,200 என 34 சதவீத அடிப்படையில் அகவிலைப்படி தொகை வழங்கப்படுகிறது. அப்படியானால் மாதம் 7,120 ரூபாய் DA தொகையாக கிடைக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் அதிகரிக்கும் பணத்தின் அளவு ரூ.1,060X12 = ரூ.12,980 என இருக்கும்.
இதற்கிடையில் அதிகபட்சமாக மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத டிஏ அடிப்படையில் மாதத்திற்கு ரூ.19,346 ஊதியமாக அளிக்கப்படும். இப்போது ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு 22,60-19,348 அல்லது 3,414 ரூபாய் அதிகரித்து வருகிறது என்பதால் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும் பணத்தின் அளவு 3,414×12 = 40,97 ரூபாய் ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6% DA உயர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 31, 2022 அன்று வெளியிடப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.