தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை மகா சிவராத்திரி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. மேலும் முக்கிய பண்டிகை களுக்கு அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். இந்த வகையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய தினங்களில் ஒன்று மகா சிவராத்திரி தினம். மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் நகைகள் வழங்கல்!
ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின் படி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை (மார்ச் 1ம் தேதி) செவ்வாய்க் கிழமை மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிவாலய ஓட்ட திருவிழாவில் அனைத்து பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்வார்கள்.
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு – அரசின் அதிரடி முடிவு என்ன?
இந்த நிலையில் நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து நாளை தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். மேலும் மகா சிவராத்திரி தினம் காரணமாக நாளை விடப்படும் விடுமுறையை ஈடு செய்ய 12ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.