தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் நகைகள் வழங்கல்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 28ம் தேதியான நாளை முதல் பயனர்கள் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி நகைக்கடன்:
தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனிற்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், நகர்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்த காரணமாக நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கபடமுடியவில்லை. ஆனால் இது குறித்து மற்ற அனைத்து கட்சிகளும் தொடர்ந்து கேட்டு வந்தது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு – அரசின் அதிரடி முடிவு என்ன?
கூட்டுறவு வங்கி நகைக்கடன் அறிவிப்புகள் முன்னதாக வெளியிட போதே, அரசு நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான பல நிபந்தனைகளை விதித்தது. மொத்தம் 48 லட்சம் பேர் கூட்டுறவு சங்க வங்கிகளில் நகை கடன் வாங்கியதில், 13 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது. ஆனால் 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் வைத்த, 22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக, கூட்டுறவு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் அதற்கான விதிகள் விலக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வரும் உக்ரைன் – ரஷ்யா போர்? பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!
இதனால் கூட்டுறவுத் துறை அதிகாரி, நகர்ப்புறங்களில் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் நகைகளுடன், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 28ம் தேதியான இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சங்க வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் இன்று முதல் தங்களின் நகைகளை பெற்று கொள்ளலாம்.