தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தற்போது கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (பிப்.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி விடுமுறை
தமிழகம் முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு மத்தியில், பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா புதிய பாதிப்புகள் சரிவை கண்டு வந்ததால், மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1 முதல் முழுமையாக திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப்.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட சில டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்புகளை தவிர்த்து மற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதே போல தொடர்மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (பிப். 12) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (பிப்.12) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.