கடையை திறக்க அனுமதி வழங்கிய அதிகாரி, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் மட்டும் இந்த குடும்பத்திற்கு எல்லாம் செய்ய வேண்டுமா என கஸ்தூரி கேட்க, உடனே மீனா, முல்லை, ஐஸ்வர்யா சென்று பார்க்கின்றனர். பின் அவர்களும் அங்கே அமர்ந்து தர்ணா செய்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பிரச்சனையை கேள்விபட்டு கஸ்தூரி மற்றும் முல்லையின் அப்பா வீட்டிற்கு வருகின்றனர். அங்கே தனம் செய்வது தவறு என சொல்ல, நீங்க எல்லாரும் இங்கே தான இருக்கீங்க தனம் மட்டும் ஏன் அங்கே இருக்கிறாள் என கஸ்தூரி கேட்கிறார். பின் ஐஸ்வர்யா முல்லை நாமளும் கிளம்பி போவோம் என சொல்ல, மீனாவை கயலை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். அப்போது அங்கே மூர்த்தி தனமும் அமர்ந்திருக்க ஐஸ்வர்யா முல்லையும் சேர்ந்து தர்ணா செய்கின்றனர். மூர்த்தி நீங்க எதற்கு இங்கே வந்தீங்க என கேட்க, வீட்டில் இருந்து நாங்க மட்டும் என்ன செய்ய போகிறோம் என சொல்கின்றனர்.
பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!
பின் பின்னாடியே கயலுடன் மீனா வருகிறார். அவர் நான் மட்டும் வீட்டில் என்ன செய்வது என கேட்க, அவரும் குழந்தையுடன் அமருகிறார். பின் அந்த இடத்திற்கு போலீஸ் வர, மூர்த்தி நடந்ததை எல்லாம் சொல்கிறார். நாங்க கடையை நம்பி தான் இருக்கிறோம் ஆனால் இவர்கள் கடையை திறக்கவிடாமல் இருப்பதாக சொல்கிறார். அப்போது போலீஸ் அந்த அதிகாரியிடம் என்ன நடந்தது என கேட்கிறார். அப்போது உள்ளே வாருங்கள் என அழைத்து செல்கிறார். பின் வெளியே இருப்பவர்கள் போலீஸ் அதிகாரியிடம் அவர்கள் பேசி அவங்க சொல்வதை கேட்டு மாறிவிடுவார் என சொல்கிறார்.
ஆனால் அப்படி எல்லாம் நடக்காது என மூர்த்தி நம்பிக்கை உடன் இருக்கிறார். மறுபக்கம் கதிர் கண்ணன் அந்த பையனை தேடி அலைகிறார்கள். அவனை கண்டுபிடிக்க அவர்கள் அடி ஆட்களை அழைத்து அடிக்க வர கதிர் அவர்களை அடிக்கிறார். பின் போலீஸ் அந்த அதிகாரியிடம் பேச அப்போது போன் வருகிறது. அதனால் உடன் வேலை செய்யும் அலுவலர் அவர்கள் மீது தவறு எதுவும் இல்லை தனிப்பட்ட காரணங்களால் அவர் இப்படி செய்கிறார் என சொல்ல, உடனே போலீஸ் அதிகாரி என்ன நடந்திருக்கும் என கணித்துவிடுகிறார்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!
பின் அந்த அதிகாரியின் மகன் போன் செய்து எந்த பிரச்சனையும் இனி வேண்டாம் என சொல்கிறார். அப்போது உன்னால் தான் இங்கே போலீஸ் வரை வந்திருப்பதாக சொல்ல என்னை மன்னித்துவிடுங்க அப்பா என சொல்கிறார். பின் போலீஸ் உங்க தனிப்பட்ட காரணங்களால் இப்படி செய்வது தவறு நீங்க அவங்க கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு தான் பெரிய பிரச்சனை ஆகும் என சொல்கிறார். அப்போது வெளியே வந்த அலுவலர் எல்லாம் சரி செய்துவிட்டேன் நீங்க கடையை திறக்கலாம் என சொல்கிறார்.
ஆனால் ஜீவா அவரிடம் என்ன காரணம் என கேட்க சொல்ல போலீஸ் அதான் கடையை திறக்கலாம் என சொல்லிட்டாங்களே அப்பறம் என்ன சிறு பையனாக நான் இருக்கும் போது உங்க அப்பா நான் படிக்க எனக்கு உதவி செய்து இருக்கிறார். அதனால் உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்க நல்லபடியாக கடையை திறக்கலாம் என சொல்ல மூர்த்தி குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர்.