மாநிலத்தில் புதிய அரசு விடுமுறை – சத்தீஸ்கர் முதல்வர் பெருமிதம்!
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உலக பழங்குடியினர் தினத்தன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று உலக பழங்குடியினர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பழங்குடியின மக்கள் சந்தித்து வரும் வறுமை, பாகுபாடு, கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை போன்ற பல்வேறு சவால்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக பழங்குடியினர் தினம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் நாட்டிலேயே முதல் மாநிலமாக சத்தீஸ்கரில் உலக பழங்குடியினர் தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் பழங்குடியின மக்களின் நலனுக்காக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடக்கக் கல்வியில் பழங்குடியின மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
குறிப்பாக பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை தெரிவிக்கும் வகையில் நவ ராய்ப்பூரில் கண்காட்சி மண்டபம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.