தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நவம்பர் 19 ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றால் விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மது விற்பனைக்கு தடை:

தமிழகத்தில் கடந்த மே மாதம் பரவ தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ,மது கடைகளும் அடைக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தொற்று தீவிரமெடுத்து பரவும் நேரத்தில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவர் என்பதால் மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.

KG – 8ம் வகுப்பு வரை அக்.18 முதல் பள்ளிகள் திறப்பு – மாநிலங்களுக்கு இடையே பயண அனுமதி!

அதன் பிறகு டாஸ்மாக் சங்கத்தினரின் கோரிக்கையால் பகுதி நேரம் மட்டும் கடை திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த நாட்களில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மது கடைகள் அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மிலாடி நபி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 19 ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாடி நபி திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல இந்த வருடம் 07.10. 2021 தேதி அன்று மாலை ரபிஉல்‌ அவ்வல்‌ மாத பிறை தமிழ்நாட்டில்‌ பல்வேறு இடங்களில்‌ காணப்பட்டது. அதனை தொடர்ந்து 08.10.2024 தேதி முதல் பிறை நிச்சயிக்கப்பட்டது. அதன்படி 19.10.2021 அன்று செவ்வாய்க்கிழமை மிலாடி நபி கொண்டாட படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்தார். அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகும். இந்த நாளில் நாமக்கல்லில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஏறி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!