சனி, ஞாயிற்று கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம்!
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிகையாக 14.08.2021, 15.08.2021 ஆகிய இரு தினங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்படும் 12 டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் தொற்று பரவல் குறைந்து வந்தது. இதனால் மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தவுடன் மக்கள் நோய் பரவல் அச்சமின்றி பொது இடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். மேலும் முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தி முடிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் தொற்று ஏறுமுகத்தில் செல்கிறது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!
இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் மீண்டும் ஒரு இக்கட்டான காலகட்டத்தை சந்திக்க நேரிடும். மேலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொற்று வேகமெடுப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் மதுக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மது வாங்குவது இல்லை. இதன் மூலம் தொற்று எளிதாக பரவும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 14.08.2021, 15.08.2021 ஆகிய இரு தினங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மணிக்கூண்டு வீதியில் செயல்படும் இரண்டு கடைகள், மேட்டூர் சாலையில் ஆறு கடைகள், கோபி, டி.ஜி.புதூரில் ஒரு கடை என மொத்தம் 12 கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்று தமிழ்நாடு மாநில வாணிப கழக, ஈரோடு மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை சுதந்திர தின விழாவின் போது மது விற்பனை செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.