தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – நேர்காணல் நடத்த வலியுறுத்தல்!
தமிழகத்தில் நாகை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக 5 பணியிடங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. மேலும் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேர்காணல் கோரிக்கை
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் பல கோவில்கள் இயங்கி வருகின்றன. அந்த கோவில்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் நாகை மண்டல இணை ஆணையர் அலுவலகம், நாகை நீலா தெற்கு வீதியில் அமைந்து இருக்கிறது. இந்த அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு 3 காலி இடமும் , ஓட்டுநர் பணிக்கு 1 காலி இடமும் , இரவு காவலாளி பணிக்கு 1 காலி இடமும் இருப்பதாகவும், அதனை நிரப்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகம் – ஏப்ரல் முதல் தொடக்கம்!
மேலும் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் இறுதியில் பெறப்பட்டன. அந்த நேரம் இந்த பணிகளுக்கான நேர்காணல் ஒரு மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நேர்காணல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதே போல மயிலாடுதுறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து விண்ணப்பித்தவர்கள் கூறுகையில், காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் இந்த பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலைத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் நாகை மண்டல இணை ஆணையர் ராமு கூறுகையில், இணை ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download