தமிழகத்தில் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகம் – ஏப்ரல் முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகம் - ஏப்ரல் முதல் தொடக்கம்!
தமிழகத்தில் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகம் - ஏப்ரல் முதல் தொடக்கம்!
தமிழகத்தில் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகம் – ஏப்ரல் முதல் தொடக்கம்!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் கோவை மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சிறப்பு ரயில்கள்:

தமிழகத்தில் மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில் சேவையை விரும்புகின்றனர். மேலும் குழந்தைகள் செல்லவும், முதியவர்கள் பயணம் செய்யவும் ரயில்கள் வசதியாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும். அதனால் ரயில்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் ஏப்ரல் முதல் ஜூன் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட விடுப்பு பணிக்காலமாக மாற்றம் – அரசாணை வெளியீடு!

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கோடை காலம் வர இருக்கும் நிலையில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் அதனை தடுக்கும் வகையில் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030) வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை திருநெல்வேலியில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதே போல மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029) ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!