தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் – நீதிமன்றம் கேள்வி!
கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜன. 23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது.
ஐகோர்ட் கிளை கருத்து:
கடந்த காலம் போல் அல்லாமல் பெண்கள் அதிகமானோர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் பெண்களின் படிப்பறிவு சதவிதமும் அதிகரித்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் இன்னல்கள் பல உள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். மேலும் பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழங்கு தொடங்கப்பட்டது.
நாட்டில் இந்த ஆண்டில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் – வெளியான அசத்தலான தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு ஏன் குறிப்பிடவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் யுஜிசி தலைவரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து அணையிட்டனர். இதனால், இது தொடர்பாக அரசு விரைவில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.