தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க முழு விபரம் உள்ளே!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், இத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் – நீதிமன்றம் கேள்வி!
Follow our Instagram for more Latest Updates
இதே போல், மாற்றுத்திறனாளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 10ம் வரை மாதந்தோறும் ரூ.600 வழங்கப்படும். இதனை தொடர்ந்து, 12ம் வகுப்பு /பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.400ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750ம் என மாதந்தோறும் வழங்கப்படும். இதே போல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.600ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இதற்கு விண்ணப்பிக்க காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அல்லது www.tnvelaivaaippu.gov.in.empower என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.