தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29ல் ‘இந்த’ ஏரியாக்களில் Current இருக்காது – முழு List இதோ!

0
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29ல் 'இந்த' ஏரியாக்களில் Current இருக்காது - முழு List இதோ!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29ல் 'இந்த' ஏரியாக்களில் Current இருக்காது - முழு List இதோ!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29ல் ‘இந்த’ ஏரியாக்களில் Current இருக்காது – முழு List இதோ!

தமிழகத்தில், மதுரை மாவட்டத்தில் நாளை துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆரப்பாளையம், மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளை சுற்றி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மின்தடை அதிக இடங்களில் ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. நாட்டில் மின் உற்பத்தி குறைந்து வருவதால் சரியான அளவில் மின் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதால் மின்சாரம் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு போன்றவற்றால் அதிகமான மின் தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும் மின் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்களை பராமரித்து வருவதன் மூலம் தடையில்லா மின் விநியோகம் மக்களுக்கு வழங்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டம்தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள், மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மின்தடை செய்யப்படுகிறது. இதை தவிர மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மூத்த குடிமக்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கியதால் ரயில் பயணி கண்டிப்பு – IRCTC விளக்கம்!

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 29) துணை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரப்பாளையத்தில் பேச்சியம்மன் படித்துறை, தமிழ் சங்கம் ரோடு, திலகர் திடல், பாரதியார் ரோடு, விவேகானந்தர் ரோடு, பெரியார் நிலையம் ஆகிய இடங்களிலும், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நேதாஜி ரோடு, வடக்கு சித்திரை வீதி, சோமசுந்தர அக்கரகாரம், சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின் ரோடு, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு சித்திரை வீதி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!