தமிழகத்தில் செப்.8 உள்ளூர் விடுமுறை – இதற்காக தான்! முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தென் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தற்போதிலிருந்தே ஓணம் பண்டிகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, இந்தாண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் மிகச்சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், இந்த ஓணம் பண்டிகையில் கலாசார நிகழ்ச்சிகளில் பாரம்பரிய கலை வடிவங்கள் முக்கியத்துவம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பல சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
‘ராஜா ராணி 2’ சீரியல் விட்டு விலகிய பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்