‘ராஜா ராணி 2’ சீரியல் விட்டு விலகிய பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை அர்ச்சனா சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய வில்லி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
ராஜா ராணி 2:
விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் நாயகன், நாயகியாக சஞ்சீவ் மற்றும் ஆல்ய மானசா நடித்து இருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஆலியா மீண்டும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலும் ரசிகர்களிடையே நல்ல இடத்தை பிடித்து வருகிறது.
மேலும் இந்த சீரியல் Diya Aur Baati Hum என்கிற ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். இதில் நடித்து கொண்டிருக்கும் போதே ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகினார். அதற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் சந்தியா ரோலில் நடித்து வருகிறார். தற்போது சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் குடும்ப பாங்கான கதைக்களத்தில் இயக்கப்படுவதால் இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த தொடரில் வில்லியாக வரும் அர்ச்சனா கதையில், நாயகி சந்தியாவை திட்டம் போட்டு மாட்டி விட முயற்சிப்பார். ஆனால் அவை அனைத்தும் ஊற்றிக்கொண்டு காமெடியாக மாறிவிடும். இதனால் இந்த அழகு வில்லிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனா சீரியலில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் அந்த இடத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து அர்ச்சனா குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்