சித்ராவின் மரணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய ஹேம்நாத் – வைரலாகும் வீடியோ!
குடும்ப பிரச்சனையின் காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சித்ராவின் மரணம் குறித்து முதன்முறையாக அவரின் கணவரான ஹேம்நாத் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சித்ராவின் மரணம்:
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்து என்னும் சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் திரையுலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சித்ராவின் கணவரான ஹேம்நாத் தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என பல செய்திகள் வெளியாகின. இதனால் போலீசார் ஹேம்நாத்தை கைது செய்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் பின்பு ஹேம்நாத் ஜாமினில் வெளிவந்தார்.
உண்மையாகவே சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் எனவும், அன்று இரவு என்ன தான் நடந்தது, இருவருக்கும் பிரச்சனை எதுவும் நடந்ததா என அனைத்து கேள்விகளுக்கும் ஹேம்நாத் முதன்முறையாக வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதாவது எப்போதும் சித்ரா கலகலப்பாக தான் இருப்பார். ரசிகர்கள் சித்ராவை முழுக்க முழுக்க முல்லையாக மட்டுமே பார்த்து வந்தனர். அவருக்குள்ளும் பிரச்சனைகள் இருக்கும் என நினைத்து பார்க்கவே மறந்துவிடுகின்றனர். அதாவது வழக்கத்திற்கும் மாறாக அவரது நடவடிக்கை இருந்தது.
Exams Daily Mobile App Download
மேலும், எப்படியும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் ஓப்பனாக கூறுவாள். அதனால் வற்புறுத்தி அவளிடம் எதைப் பற்றியும் கேட்க வேண்டாம் என அமைதியாக இருந்து விட்டேன் எனக் கூறுகிறார். பின்பு குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்னாச்சு என்று கதவை தட்டி பார்க்கையில் மேலே ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார். உண்மையாகவே விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்தேன். அவள் இறந்துவிட்டாள் என்பதை இந்த நொடி வரைக்கும் கூட நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.