கதிருக்கு ஆறுதல் சொன்ன தனம், முல்லைக்கு செலவானதை நினைத்து பொறாமைப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கஸ்தூரி முல்லைக்கு செய்த செலவுகளை பற்றி மீனாவிடம் பேச மீனா தன் பக்கம் உள்ள ஆதங்கத்தை சொல்கிறார். அதை எல்லாம் கதிர் கேட்டுவிடுகிறார். பின் கதிர் வருத்தப்பட தனம் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையை நினைத்து வருத்தப்பட அப்போது தனம் வந்து எதற்கு அப்படி எல்லாம் நினைக்கிறாய் என சொல்கிறார். பின் தனம் முல்லை நல்லபடியாக கர்ப்பமாக இருப்பாள் என தான் எனக்கு தோன்றுகிறது என சொல்கிறார். மறுபக்கம் கஸ்தூரி மீனா ஐஸ்வர்யா பாத்திரம் கழுவி கொண்டிருக்க அவர்களை பார்க்க செல்கிறார். அப்போது மீனாவிடம் கஸ்தூரி முல்லைக்கு செலவு எவ்வளவு ஆனது என கேட்க அப்போது மீனா அதெல்லாம் நிறைய பணம் ஆகிவிட்டது என சொல்கிறார். இதுவே எனக்கு இப்படி நடந்தால் பணம் கொடுக்காமல் அட்வைஸ் தான் செய்வார்கள்.
TN Job “FB Group” Join Now
நான் புது வீடு கட்ட சொன்னேன் அப்போது கடன் வாங்க கூடாது என சொல்லிவிட்டு இப்போது இப்படி செய்கிறார்கள் என சொல்கிறார். பின் கஸ்தூரி உனக்கும் ஒரு நாள் கண்டிப்பாக வீடு கட்டி கொடுப்பார்கள் என சொல்ல கதிர் அவர்கள் பேசுவதை கேட்டு வருத்தப்படுகிறார். பின் கண்ணன் கயலை கொஞ்சிக் கொண்டிருக்க அப்போது ஜீவா வந்து கண்ணனை நக்கலடித்து பேசுகிறார். பின் வீட்டிற்குள் வந்த மீனாவும் ஐஸ்வர்யாவும் கஸ்தூரி நம்மளிடம் பல விஷயங்களை போட்டு வாங்குகிறார் என சொல்கிறார். இது தெரியாமல் நான் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டேன் என மீனா வருத்தப்படுகிறார்.
அப்போது கண்ணன் வர ஐஸ்வர்யாவிடம் தனியாக பேச வேண்டும் என மீனாவை அண்ணன் கூப்பிடுவதாக சொல்லி போக சொல்கிறார். பின் மீனா சென்றுவிட ஐஸ்வர்யாவிடம் காதலுடன் பேசுகிறார். பின் மீனாவை முட்டை போட்டு தர சொல்ல ஆனால் கண்ணனே அவருக்கு முல்லை செய்து கொடுக்கிறார். அப்போது மீனா வர ஜீவா என்னை கூப்பிடவே இல்லையாமே என கேட்க கண்ணன் எதோ சமாளித்துவிடுகிறார். பின் மூர்த்தி ஜீவா கதிர் வெளியே இருக்க கடன் கொடுத்தவர் வந்து பேசுகிறார். கதிர் அதை நினைத்து வருத்தப்பட மூர்த்தி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் எல்லாரும் வீட்டிற்கு வர கண்ணன் சமைத்ததை அண்ணன்களுக்கு கொண்டு வருகிறார். பின் மூர்த்தி மீனா கண்ணனை நக்கலடித்து பேசுகிறார்கள்.