இரு சக்கர வாகனத்தில் 4 வயது குழந்தைக்கும் இனி ‘தலைக்கவசம்’ கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்பை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஹெல்மெட்:
இந்தியாவில் தினந்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு சாலை விதிகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சாலைகளில் நடப்போர் வாகனங்களில் செல்வோர் என தனித்தனி விதிமுறைகள் உள்ளது. இவற்றைப் பின்பற்றி வாகனங்களில் சென்றால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம். சாலை விதிகளில் ஒன்று தலைக்கவசம் அணிந்து செல்லுதல். ஆனால் பெரும்பாலானோர் இதை செய்வதில்லை. அலட்சியமாக தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது.
Infosys நிறுவனத்தில் சுமார் 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
இதனை தடுக்க வாகனங்களில் செல்வோர் முறையாக தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிகளை மீறுவோர்க்கு போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். இந்த விதிமுறைகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதியே விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் எதிர்பார்த்த நேரங்களில் ஏற்படும் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு!
இது போன்ற துயர சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசின் மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15ம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.