தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் - தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் - தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகள்:

தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து வகையான தேர்தலின் போது, தேர்தல் பணிகளை அரசு ஊழியர்கள் தான் செய்து வருவார்கள். மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செய்து வருவார்கள். அரசு தேர்தல் பணிகளுக்கான அரசு ஊழியர்களை நியமிக்கிறது. பூத் சிலிப் வழங்குதல், மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்துதல், தேர்தல் கண்கானிப்பு பணி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் பணிகளிலும் அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – பிப்.25ம் தேதி முதல்! அமைச்சர் அறிவிப்பு!

தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் ஊதியத்தின் படி, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம், 3 நாட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தேர்தலுக்கு முந்தையநாள் மற்றும் தேர்தல் நடைபெறும் நாட்களில் உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு அலுவலர்-1: பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் 3 நாட்ளுக்கு ரூ.750-ம், உணவுக்கு ரூ.300-ம், தேர்தலுக்கு முந்தைய நாள் ரூ.250, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களுக்கு ரூ.250 என மொத்தம் ரூ.1,550 வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு அலுவலர்-2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு ரூ.600ம், வாக்குப்பதிவு அலுவலர்-3-க்கு ரூ.1,550 என்றும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.800-ம், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.600-ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் வரவேற்பு அலுவலருக்கு ரூ.800-ம், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு 850 ரூபாயும், வாக்கு எண்ணிக்கை உதவியாளருக்கு ரூ.650-ம், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.300-ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளருக்கு ரூ.1,000-ம், வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிடும் நுண்பார்வையாளருக்கு ரூ.450-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!