தமிழகத்தில் நிலவும் கடும் பனி – மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு.. மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்!

0
தமிழகத்தில் நிலவும் கடும் பனி - மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு.. மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்!
தமிழகத்தில் நிலவும் கடும் பனி - மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு.. மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்!
தமிழகத்தில் நிலவும் கடும் பனி – மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு.. மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்!

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பனி அதிகம் நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

காய்ச்சல்:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தில் குறைந்ததும் அடுத்ததாக கடும் குளிர் நிலவ தொடங்கியது. அதிகாலை நேரங்களில் வீசும் கடும் குளிர் காற்று மற்றும் பனியால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் ஜன. 26 குடியரசு தினவிழா – நிகழ்ச்சிகளை காண டிக்கெட் புக் செய்யலாம்.. வழிமுறைகள் இதோ!

Follow our Instagram for more Latest Updates

இந்த பனிப்பொழிவின் காரணமாக மக்கள் காய்ச்சல் இருமல், தொண்டைப்புண், சளி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே போல தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் சிகிச்சைக்காக வருவதாக தகவல் வந்துள்ளது.

தற்போது நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஒரே படுக்கையில் 2 பேர் அமர்ந்து சிகிச்சை பெறும் நிலை உருவாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து பேசிய நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் அதிக காய்ச்சலுடன் வரும் நோயாளிகளை சிறப்பு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம். பாதிப்பு அதிகமானால் கூட அதனை சரி செய்ய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!