தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை !
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை அடுத்த நாளும் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த சில வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையானது இன்றும் நாளையும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அது குறித்து வெளியான அறிக்கையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் நாளை (ஜூலை 22) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூரும் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 23,24,25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் காற்றின் வேகம் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.