தமிழக மக்களே கவனம்…. இந்த பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் தகவல்!!

0
தமிழக மக்களே கவனம்.... இந்த பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே கவனம்.... இந்த பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே கவனம்…. இந்த பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்று முதல் 19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து சென்னை வானிலை மையம் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வங்கக்கடலில்‌ தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று முதல் 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் – வலுக்கும் கண்டனம்!

Exams Daily Mobile App Download

இதே போல் தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌ உள்ளிட்ட இடங்களில் கன முதல்‌ மிக கனமழையும்‌ கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, மதுரை, திருச்‌சிராப்பள்ளி, சிவகங்கை, நாமக்கல்‌, கரூர்‌, தர்மபுரி, சேலம்‌, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, இராமநாதபுரம்‌ அரியலூர்‌, பெரம்பலூர்‌ உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனை தொடர்ந்து, மீனவர்களுக்கான எச்சரிக்கையில் வருகிற 18,19ம் தேதிகளில் மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌, இலங்கை கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. அதனால் 18,19ம் ஆகிய தேதிகளில் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!