ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் – வலுக்கும் கண்டனம்!

0
ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் - வலுக்கும் கண்டனம்!
ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் - வலுக்கும் கண்டனம்!
ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் – வலுக்கும் கண்டனம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கொடுத்த தண்டனையால், மாணவன் ஒருவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மாணவனுக்கு தண்டனை:

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள பள்ளிகள் கொரோனா கால கட்டத்திற்கு பின் இந்த ஆண்டு தான் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்க கூடாது என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைக்கான அரசு விடுமுறை மாற்றம்? – குழப்பத்தில் மக்கள்!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உனா தாலுகாவில் உள்ள சரஸ்வதி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கரண் என்ற மாணவன், சரியாக படிக்கவில்லை என்பதால், அவனுக்கு ஆசிரியர் 200 தோப்புக்கரணம் போடும்படி தண்டனை வழங்கி உள்ளார். ஆசிரியரின் உத்தரவை கேட்டு தோப்புக்கரணம் போட்ட மாணவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த மாணவன் கால்களில் தசை பிடிப்பு போல உள்ளதாக சொல்லி இருக்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனை தொடர்ந்து அவனுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. அதனால் அவனுடைய பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். ஆனால் அங்கே அவனுக்கு சிகிச்சை வழங்கப்படாமல் அவனை ராஜ்கோட்டில் உள்ள ஒரு மருத்துவரிடம் பரிந்துரை செய்தனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவனுக்கு சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கரனின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த கல்வி ஆய்வாளருக்கு மாவட்ட கல்வி அதிகாரி ராஜேஷ் தோடியா உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!