தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை வெளுத்துவாங்கும் – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை வெளுத்துவாங்கும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை வெளுத்துவாங்கும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை வெளுத்துவாங்கும் – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் அடுத்து வரும் மூன்று மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கூடுதல் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 21 மாவட்டத்தில் அடுத்து வரும் மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!