அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – மும்பைக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை!
மாநிலத்தில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
ஆரஞ்சு அலெர்ட்:
மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ரயில் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் நேற்று மும்பைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் வாரங்களில் நகரம் ‘மிகக் கனமழை’ யைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
Exams Daily Mobile App Download
மும்பை மாநிலத்திற்கு இன்று முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. மறுபுறம் அண்டை மாநிலமான பால்கர் மற்றும் தானே மாவட்டத்திற்கும் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ராய்காட் மற்றும் ரத்னகிரியை மாவட்டங்களில் அடுத்த 3-4 மணி நேரத்தில் ‘மிகவும் தீவிரமான மழை பெய்யும்’ என்று IMD தெரிவித்துள்ளது. தொடர்ந்து புனே, ரத்னகிரி, ராய்காட் மற்றும் சதாரா ஆகிய பகுதிகள் ‘ரெட்’ அலர்ட்டாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்
மாநிலத்தில் புதன் கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கியுள்ளது. மேலும் குஜராத்தில் உள்ள நவ்சாரி மற்றும் வல்சாத் கடற்கரை நகரங்கள்; கர்நாடகாவில் உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மற்றும் ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் வரும் வாரத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவை கொடுக்கும் மழையாக இந்தப் பருவ மழை கருதப்படுகிறது. இந்த வகையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.