இந்தியாவில் ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் கொரோனா பரவலின் வீதம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 16,167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 41 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது. இதுவரையிலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 4 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, 24 மணி நேரத்தில் மட்டுமே 16,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரைக்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,61,899 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக இந்தியாவில் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 41 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,730 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்
அதே போல, நேற்று ஒரே நாளில் 15,549 பேர் சிகிச்சையில் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், 1,35,510 பேர் தற்போது தொற்று பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது, இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 0.31% பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவுதலின் வீதம் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 34,75,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.