விடாது கொட்டப்போகும் கனமழை.. “இந்த” 9 மாவட்ட மக்களே உஷாரா இருங்க – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை:
தமிழகத்தில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நீலகிரியில் பெய்த இடைவிடாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அக்.13ம் தேதி ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர்,விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கூடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், கடலூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் மழையால் ஏரிகளில் நீர்வரத்து பெருகியுள்ளது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் 78% நீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அக்.13,14ம் தேதிகளில் நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தேனி, மதுரை, சிவகங்கை, கரூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்