தமிழகத்தில் செப்.14 வரை மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலை அறிக்கையின்படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது
மழைக்கு வாய்ப்பு:
தென்மேற்கு பருவமழை வேகமெடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சில நாட்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? காய்ச்சல் அபாய எதிரொலி!
அதனை தொடர்ந்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 90 மிமீ மழை பெய்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று 50 கி மீ வேகத்தில் வீசும். மேலும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் காற்று வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செப்டம்பர் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்