நவம்பர் ரொம்ப நல்ல மாசம் போலயே.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இன்று,நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மீனவர்கள் இதனால் கவனமாக இருக்கும் படியும் வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகம் முழுவதும் கனமழை அறிவிப்பு வெளியான நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் எப்போது கனமழை அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருப்பது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், வங்க கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது வலுவடைந்து இருப்பதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால், நவம்பர் 20, 21, 22 ஆகிய 3 நாட்களும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலூர், விழுப்புரம்,கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் நாளை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்களுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு.. கேஸ் சிலிண்டர் விற்பனையில் முறைகேடு.. வரப்போகும் புதிய மாற்றம்!
Exams Daily Mobile App Download
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் தங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அதற்கு தயாராகுமாறு தமிழ்நாடு வெதர் மேன் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார். இருப்பினும் சமீப காலமாக சென்னை, திருவாரூர் உள்பட சில மாவட்டங்களில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கனமழை எச்சரிக்கையால் நாளை அல்லது நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.