பொதுமக்கள் கவனத்திற்கு.. கேஸ் சிலிண்டர் விற்பனையில் முறைகேடு.. வரப்போகும் புதிய மாற்றம்!

0
பொதுமக்கள் கவனத்திற்கு.. கேஸ் சிலிண்டர் விற்பனையில் முறைகேடு.. வரப்போகும் புதிய மாற்றம்!
பொதுமக்கள் கவனத்திற்கு.. கேஸ் சிலிண்டர் விற்பனையில் முறைகேடு.. வரப்போகும் புதிய மாற்றம்!
பொதுமக்கள் கவனத்திற்கு.. கேஸ் சிலிண்டர் விற்பனையில் முறைகேடு.. வரப்போகும் புதிய மாற்றம்!

சமீப காலமாக அதிக அளவில் கேஸ் சிலிண்டர்கள் மீதான முறைகேடுகள் பதிவாகி வருகின்றது. இதனால் இது போன்ற முறைகேடுகளை தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக முக்கிய முடிவை எடுத்துள்ளன.

கேஸ் சிலிண்டர்:

இந்தியாவில் பாரத் பெட்ரோலியம், இன்டேன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களுக்கான கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வினால் தற்போது கேஸ் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்து உள்ளது. சில வருடங்களுக்கு பின்பு வரை ரூ.500 களில் விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டரின் விலையானது தற்போது ரூ.1,100 ஐ தாண்டியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் சிலிண்டர்களில் எடை குறைவு போன்ற முறைகேடுகள் நடந்து வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான 14 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் பயனர்களுக்கு டெலிவரி செய்யும் போது எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஐடியை தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகும் மற்றொரு முக்கிய துறை – வெளியான பகீர் ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

இதனை தடுக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்களில் QR கோடுகளை அச்சிட்டு கொடுக்க இருப்பதாகவும், இதனை பயனர்கள் ஸ்கேன் செய்து ஏஜென்சியின் பெயர், எடை, கேஸ் நிரப்பப்பட்ட ஆலை, தேதி போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்றும், ஏதேனும் தவறாக இருப்பின் அவற்றை முறையாக புகார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!