தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று கூடுதல் வெப்பசலனத்தின் காரணத்தினால் 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சேலம், ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலை காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளி & கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை?
மேலும், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், ஜூன் 2 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரைக்கும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதி, இலங்கை கடலோரப் பகுதி, தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download