ஆதார் கார்டை புதுப்பிக்க ஆவணங்கள் தேவையில்லை – UIDAI வெளியிட்ட புதிய அப்டேட்!
இந்தியாவின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையை புதுப்பிக்க புதிய வழிமுறையை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆதார் அட்டையை எந்த ஆவணங்களும் இல்லாமல் எளிதாக புதுப்பிக்கலாம் இது குறித்து பதிவில் காண்போம்.
ஆதார் அப்டேட்:
இந்தியாவில் பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்று ஆதார் அட்டையும் மிக முக்கிய ஆவணமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த ஆதார் ஒரு தனி நபரின் அடையாள ஆவணமாக உள்ளதால் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண் கேட்கப்படுகிறது. அரசு வேலைகளுக்கும், தனியார் துறை சார்ந்த வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களின் ஆதார் விவரங்களை மாற்ற முயற்சித்தால் அதற்கு சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். சில நேரங்களில் ஆதாரை அப்டேட் செய்ய உங்களிடம் எந்த ஆவணமும் இல்லை என்றால் நீங்கள் குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த புதிய முறையை தற்போது ஆதார் அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டில் முகவரியை புதுப்பிக்க குடும்பத்தலைவரின் ஆதார் மட்டுமே போதுமானது. இதற்கு ஆதார் சேவை மையம் வாயிலாக குடும்ப அடிப்படையில் ஆதார் அட்டை முகவரி புதுப்பிப்பை மேற்கொள்ள குடும்பத் தலைவரின் கைரேகையை பயோமெட்ரிக் கட்டாயம் தேவை.