ரயில் பயணிகள் கவனத்திற்கு – வந்துள்ள புதிய விதிமுறைகள்… இனி டிக்கெட் முன்பதிவு ரொம்ப ஈஸி!
இந்தியாவில் ஏராளமான மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்து வரும் நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகளை ரயில்வே துறை எளிமையாக்கி வருகிறது. தற்போது வந்துள்ள புதிய விதிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே நாடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அளித்து வருகிறது. குறிப்பாக தற்போது டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் சுலபமாகி விட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே சில நொடிகளில் டிக்கெட்டை முன்பதிவு செய்து எவ்வித இடையூறும் இன்றி வசதியாக பயணிக்கலாம். இருப்பினும் சில நேரங்களில் புறநகர் ரயில்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் இணையதள கோளாறு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், அதனால் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் பயணிகள் பலர் புகார் தெரிவித்து வந்தனர்.
Whatsapp பயனாளர்கள் கவனத்திற்கு.. இனி Statusல் புதிய வசதி – அட்டகாசமான புதிய அம்சம் அறிமுகம்!
இதுகுறித்து ரயில்வே துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகளுக்கான டிக்கெட் மற்றும் புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இனி புறநகர் ரயில்களில் ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் டிக்கெட்டை புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.