HCL Tech நிறுவனத்தில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
HCL Tech நிறுவனம் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 1500 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க போவதாகவும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
HCL நிறுவனம்:
நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான HCL நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் HCL நிறுவனதில் புதிதாக எந்த தகுதியான நபர்களையும் பணியமர்த்தவில்லை. மேலும், இது போன்ற நிறுவனங்களில் கொரோனா காலகட்டத்தில் பணியாளர்கள் யாரும் நேரடியாக அலுவகங்களுக்கு செல்லவில்லை.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – விதவிதமான வகைகளில் அட்டைகள்! முழு விபரம் இதோ!
வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்தாண்டு காலியாக இருக்கும் பணியிடங்களை HCL நிறுவனங்கள் நிரப்பவுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் HCL, TATA போன்ற முக்கியமான பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். பகுதி பகுதியாக மட்டுமே ஊழியர்களை அலுவலங்களுக்கு அழைத்து வருகின்றனர். தற்போதைக்கு 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் வேலை செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மீதி 95 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து தான் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் HCL நிறுவனம் அதன் Mihan SEZ யூனிட்டில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டிற்குள் 50% ஊழியர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், HCL நிறுவனம் கூடுதலாக 1500 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.