ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – விதவிதமான வகைகளில் அட்டைகள்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் 4 வகைகள் உள்ளது. அவை என்னென்ன அதன் பயன் மற்றும் சிறப்பம்சங்கள் மேலும் முழு விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஆதார் அட்டை:
இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படும் இந்த ஆதார் அட்டை ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை போன்றவைகள் போல முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். அரசுத்துறை, தனியார்துறை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. இந்த ஆதாரை நாம் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். அதற்கான வசதியை UIDAI அமைப்பு நமக்கு வழங்கி வருகிறது.
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!
குடிமக்களின் வசதிக்காக, பல வகையான ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றது. அதாவது முதலில் ஆதார் லெட்டர் இது அனைவரது வீட்டு முகவரிக்கும் யுஐடிஏஐ மூலம் அனுப்பப்படுகிறது. யுஐடிஏஐ எந்த கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையை உருவாக்கிய பிறகு இந்த ஆதார் அட்டையை வீட்டு முகவரிக்கு அனுப்புகிறது. அடுத்ததாக mAadhaar அட்டை இது ஒரு மொபைல் செயலி ஆகும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Exams Daily Mobile App Download
பிவிசி ஆதார் அட்டை இது கிரெடிட் கார்டு வடிவில் இருக்கும். இந்த ஆதார் அட்டையில் டிஜிட்டல் QR குறியீடு இடம் பெறும். இந்த ஆதார் கார்டு கிழியாது, நீர் பட்டாலும் சேதமகாது. நான்காவதாக மின் ஆதார் அட்டை இ-ஆதார் என்பது ஆதார் அட்டையின் மின்னணு வடிவம் பிவிசி ஆதாரை போல இதிலும் QR குறியீடு இடம் பெற்றிருக்கும். நீங்கள் ஸ்கேன் செய்து அனைத்து தகவல்களையும் குறிப்பிடலாம். இதில் உங்களின் விவரங்களை கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கலாம். இந்த அட்டையில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.