TNPSC Group 1 தேர்வு குறித்த முக்கிய உத்தரவு 2022 – ஐகோர்ட் நடவடிக்கை!

0
TNPSC Group 1 தேர்வு குறித்த முக்கிய உத்தரவு 2022 - ஐகோர்ட் நடவடிக்கை!
TNPSC Group 1 தேர்வு குறித்த முக்கிய உத்தரவு 2022 - ஐகோர்ட் நடவடிக்கை!
TNPSC Group 1 தேர்வு குறித்த முக்கிய உத்தரவு 2022 – ஐகோர்ட் நடவடிக்கை!

TNPSC மூலம் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20 ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க கோரி மேல்முறையீடு வழக்குகளில் TNPSC பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Group 1 தேர்வு

TNPSC குரூப் 1 தேர்வு முதல் நிலை, முதன்மை, மற்றும் நேர்காணல் என மூன்று நிலையாக நடைபெறும். துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், உயர்நீதிமன்ற வழக்கு ஆகியவற்றின் காரணமாக முதன்மைத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தேர்வு கடந்த மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு!

இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான (200 கேள்விகளுக்கான) மாதிரி விடைகள் வெளியிடப்பட்டதில், 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு என புகார் எழுந்தது. மேலும் இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், நிபுணர் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வேலுமணி உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

அந்த மனுக்களில், மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என நிபுணர் குழு முடிவுக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை மற்றும் அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் ஆய்வு செய்திருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து, அனைத்து கேள்விகளையும் பதில்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு வழக்குகளில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து பதிலளிக்கும்படி TNPSC க்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!