1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு!

0
1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 23ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு!
1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 23ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு!
1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 1 லிருந்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகள் முடிவடைந்து வரும் ஜுன் 13ம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இப்போது தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 23ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறையைத் தொடர்ந்து ஜூன் 23, 2022 அன்று மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் கொரோனா பரவல்!

இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ‘1 முதல் 10 மற்றும் 12ம் வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 23 ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும். 11ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, பெரும்பாலான புதுச்சேரி மாணவர்கள் தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை எழுதுவதால், ஜூன் 17 ஆம் தேதி TN SSLC முடிவுகள் 2022 வெளியிடப்பட்டதை தொடர்ந்து 11 ஆம் வகுப்புக்கான பள்ளிகளை திறக்கும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பச் செயல்முறை ஜூன் 17 ஆம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரியில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகம், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் எதுவும் இன்றி பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியது. அதாவது, கொரோனா தொற்றுநோய் காரணமாக 2021ம் ஆண்டில் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!