தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – இனி ‘இனிப்பு பொங்கல்’!
தமிழகத்தில் இனி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று இனிப்பு சர்க்கரைப் பொங்கல் வழங்குவதற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் :
மதிப்பு மிக்க தலைவர்களின் பிறந்த நாளன்று சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும் எனவும், அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய தலைவர்களின் பிறந்த நாட்களில் வழக்கமாக வழங்கப்பரும் சத்துணவுக்கு பதிலாக எவ்வித கூடுதல் செலவினமின்றி சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு புதிய வகை கலவை சாதங்கள் அறிமுகப்படுத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, குழந்தைகளுக்கு உணவுட்டுச் செலவினத்திற்கென வழங்கப்பட்டு வந்த செலவினத் தொகையினை தொடக்கப் பள்ளி பயனாளி ஒருவருக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு நாள் ஒன்றக்கு ரூ.1.30 ஆகவும், பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1.70 ஆகவும் , உயர் தொடக்கப் பள்ளி பயனாளிகளுக்கு பயனாளி ஒருவருக்கு உணவூட்டுச் செலவலினத்தை பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்க ரூ.1.40 ஆகவும், பருப்பு பயன்படுத்தாக நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1.80 ஆகவும் உயர்த்தி வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
எனவே, தலைவர்களது பிறந்த நாட்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்குவதற்கு தேவைப்படும் வெல்லம், நெய் போன்ற செலவினங்களை பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உணவூட்டுச் செலவினமான ரூ.1.70 / ரூ.1.80 ஐ பயன்படுத்தி செலவினம் மேற்கொள்ள தொிவித்துக் கொள்ளப்படுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவுத் திட்டம்), கூருதல் கல்வி அலுவலர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியோர் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் / நகராட்சிகளில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களிலும் இனிப்பு பொங்கல் வழங்க ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் / நகராட்சி ஆணையர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்