தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளி வகுப்புகள் சனிக்கிழமைகளிலும் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருமே மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். அதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பள்ளி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருந்தது. அதனால் பாடங்களை பொதுத்தேர்வுக்கு முன்பாக விரைவாக நடத்தி முடிக்க வேண்டுமென அனைத்து சனிக்கிழமைகளிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. இது ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என இருவருக்கும் மன சுமையை ஏற்படுத்தியது. அதனால் இதனை தவிர்க்கும் பொருட்டு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட்டது.

வரி விலக்கை பெற்றுத் தரும் அஞ்சலகத்தின் சூப்பர் திட்டம் – நீங்களும் பயனடைய இப்போவே ஃபாலோ பண்ணுங்க!

அத்துடன் மாணவர்களின் நலன் கருதி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. மேலும் விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா காலத்தில் அளித்த தொடர் விடுமுறைகள் காரணமாக மாணவர்கள் கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பாடத்திட்டங்களை முடிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!